RSS

பாகற்காயின் மகத்துவம்

சித்த மருத்துவ வழக்கில் காலங்காலமாக நீரிழிவு நோய்க்கு பாகற்காய் பயன்படுத்தி வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று ஆராய்ச்சி மூலம் அதை விஞ்ஞானிகளோ நிரூபித்துள்ளனர். பாகற்காய் இன்சுலின் செய்கையினைத் தூண்டுவதாக கண்டறியப்படுள்ளது.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. இங்கு கசப்புச் சுவை கொண்ட, ஆனால் இமாலய மருத்துவத்தன்மை கொண்ட காய்கறி வகையில் ஒன்றான பாகற்காயின் மகத்துவத்தைப் பார்ப்போம். நமது முன்னோர்கள் சுவைக்கு ஒரு காய் என வகுத்து, கசப்புச் சுவையே உடம்புக்கு மருத்துவ ரீதியில் நலம் பயக்கும் சுவை எனக் கண்டறிந்து, பாகற்காயின் அருமையை உணர்ந்து தகுந்தபடி பயன்படுத்தியுள்ளனர்.



நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாவிற்க்குத்தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

பாகற்காயில் பல்வேறு விட்டமின்கள், சத்துகள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. அறுசுவைகளுக்கும் தனித்தனி மருத்துவப் பயன்கள் உண்டு. இதில் கசப்புச் சுவைக்கு தனிப்பட்ட சிறப்பு மருத்துவ குணம் உண்டு.

நீர்ச்சத்து, புரதச்சத்து, மாச்சத்து, கொழுப்புச் சத்து, இரும்பு, கல்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற பல தாதுச் சத்துகளும் நார்ச்சத்தும் இதில் உள்ளன. விட்டமின் பி, சி போன்றவையும் அடங்கியுள்ளன. பாகற்காயில் ஹைபோகிளைசேமிக் என்ற ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி கொண்ட அமிலம் உள்ளது. மேலும் கார குளுக்கோஸ், நீரில் கரையும் மஞ்சள் அமிலம், ரெசின், சாம்பல் போன்றவையும் உள்ளன. பாகற்காய் விதையிலிருந்து ஒரு வகையான நிறமற்ற, மணமற்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் தொழிலியல் துறையில் வெகுவாகப் பயன்படுகிறது. பாகற்காய் சக்கையிலிருந்து புரதச்சத்து எடுக்கப்படுகிறது.

* பாகற்காய் பித்தம் தாக்கும். உடல் உரமுண்டாக்கி, பசி தூண்டி, பால் சுரப்பியாகச் செயல்படுகிறது. கண் நோய்கள், இரத்த அழுத்த நோய், மூலம், தோல் நோய், நரம்புக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும், விஷ முறிவு மருந்தாகவும் செயல்படுகிறது. சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

* தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர, ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
* இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறில், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க, சளி, இருமல் குறையும்.
* இலைச்சாற்றை பாதங்களில் ஏற்பட்ட வெடிப்பில் பூசி வர, வெடிப்பு மறையும்.
* வேரை நன்கு அரைத்து வெளி மூலத்தில் பூசி வர, மூலம் குணமாகும்.
* இலைகளைத் தண்டோடு எடுத்து உலர வைத்து, பொடியாக்கி காயங்கள், புண்கள் மேல் தூவி வர புண், காயம் ஆறும்.
* இலைச்சாற்றுடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரை பொடி சேர்த்து, தீப்புண்கள், சுடுநீர் பட்டதால் ஏற்பட்ட காயங்கள் மேல் போட்டு வர காயங்கள் உடனே ஆறும்.
* வெறும் வயிற்றில் ஒரு கரண்டி இலைச்சாறு அருந்த வயிற்றுக் கிருமிகள் அழியும். மலச்சிக்கல் மாறும். அதிகமான வீரியமுள்ள மருந்துகளால் ஏற்பட்ட தீமையை மாற்ற இலைச்சாறு அருந்தலாம்.
* பாகற் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும்.
* பாகற்காய் கூட்டை உண்டு வர, ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாதம், மூட்டுவலி மாறும். பாகற்காய் குழம்பு உடல் பலத்தைக் கூட்டும். கண் பார்வையைத் தெளிவுபடுத்தும்.
* பாகற்காயை வறுத்து சாப்பிட்டு வந்தால், எலும்பு பலம் பெறும். பல் உறுதி பெறும். நரம்புகளைப் பலப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைக் காக்கும்.
* அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், ரத்தக் கொதிப்பு மாறும். உடல் கனம் மாறும்.
* அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும்.
* பாகற்காயை பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத்திறன் கூடும்.
* புகைப்பிடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை பாகற்காய் நீக்கும்.
* பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே, பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும்போது, இதைத் தவிர்க்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment