RSS

மருத்துவ பலன்கள் தரும் தும்பை

தும்பை இலைச் சாற்றுடன் தேன் கலந்து தினமும் இரு வேளை பருகிவர, அடிக்கடி ஏற்படும் ஜலதோஷ பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். அதன் மருத்துவ நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
மாதவிலக்கு சீராக :
சில பெண்மணிகளுக்கு உடலில் உள்ள வாதத் தன்மைகளால், அவர்களின் மாத விலக்கு சீராக நடைபெறாமல், தாமதிக்கும் தன்மைகள் காணப்படும்.
இந்த பாதிப்பை சரி செய்ய, தும்பை இலை, காட்டாமணி என அழைக்கப்படும் உத்தாமணி இலை இவற்றை சரி விகிதத்தில் கலந்து அரைத்து, அதில் விரல் நுனியளவு எடுத்து, பாலில் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மாத விலக்கு பாதிப்புகள் யாவும் விலகி விடும். எனினும் இந்த மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் அவசியம் உணவுக் கட்டுப்பாடு தேவை, உணவில், உப்பு, புளி மற்றும் காரம் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

கருப்பை பாதிப்பு :
தாய் மார்களின் கருப்பை பாதிப்புகள் நீங்க, தும்பை மலர்களை ஆட்டுப் பாலில் இட்டு காய்ச்சி, அந்தப் பாலை தொடர்ந்து பருகி வர, துன்பங்கள் தந்த கருப்பை பிரச்சனைகள் விலகி, உடல் நலமாகும்.

மூலம் :
தும்பை இலைச் சாறு மற்றும் துத்தி இலைச் சாறு இவற்றை பாலில் கலந்து பருகி வர, உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட அனைத்து வகை மூல வியாதிகளும் தீர்ந்து விடும்.

வயிற்றுப் போக்கு :
குழந்தைகளுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் மாந்தம், கழிச்சல் மற்றும் வயிற்றுப் பொருமல் குணமாக, தும்பை இலைகளுடன் ஓமத்தை அல்லது ஓமவல்லி இலைகளை அரைத்து, குழந்தைகளுக்கு பருகத்தர, அவையாவும் விலகி, குழந்தைகள் விரைவில் நலமடையும்.

புண்ணிற்கு :
தும்பை இலைச் சாற்றை தேங்காய் எண்ணையில் இட்டு காய்ச்சி, ஆறாத காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவி வர, அவை எல்லாம் விரைவில் ஆறி விடும்.

டான்ஸிலிடிஸ் :
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றான டான்சிலிஸ் எனும் தொண்டைச் சதை பாதிப்பை தவிர்க்க தும்பை, அரு மருந்தாகிறது. தும்பை இலைகளை பயிற்றம் பருப்புடன் கலந்து கொதிக்க வைத்து, சாப்பாட்டில் முதலில் சாப்பிடும் பருப்பு போல மசித்து சாப்பிட்டுவர, தொண்டை சதை இன்னல்கள் விலகி, பாதிப்புகள் சரியாகும்.
தொண்டை பாதிப்பு நீங்க வேறொரு முறையாக, தும்பை இலைகளுடன் தும்பை மலர்கள், திப்பிலி பொடி மற்றும் அக்ரகாரம் எனும் மூலிகை இவற்றை தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி குறைந்து, உடல் நலமாகும்.

வாயுத் தொல்லை :
தும்பை இலைகளை தினமும் காலை வேளைகளில் சாறெடுத்து பருகி வர, உடலில் வாயுத் தொல்லை தீரும். தும்பைச் சாற்றை, நெற்றியின் முன் பக்கம் மற்றும் கழுத்தில் தடவி வர, தலைவலிகள் யாவும் விலகி விடும்.

பூச்சிக் கடி :
உடலில் ஒவ்வாமை அல்லது பூச்சிகளினால் உண்டாகும் கட்டிகள், தோல் நமைச்சல் மற்றும் சிரங்குகள் குணமாக, தும்பை இலைகளை அரைத்து, தினமும் அவற்றின் மேல், தடவி வர வேண்டும். தூய்மையான தும்பைச் செடி, விஷத்தை முறிக்கக் கூடிய ஆற்றல் மிக்கதாகும்.
தேள் கொட்டிய வலி வேதனை குறைய, தும்பை இலைச் சாற்றினை சில துளிகள் தேனில் கலந்து பருகக் கொடுத்தபின்னர், தேள் கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றைக்கொண்டு நன்கு தேய்த்து வர, விஷம் முறிந்து வலிகள் குறைந்து விடும். இந்த முறையைப் பயன்படுத்தி, மற்ற விஷக் கடிகளுக்கும் தீர்வு காணலாம்.

மலச்சிக்கல் :
நேரம் தவறிய உணவு மற்றும் போதிய உறக்கமின்மை, மன உளைச்சல் பாதிப்புகள் இவற்றால் அடையும் உடல் நல பாதிப்பே, மலச்சிக்கல் ஆகும். மனிதரின் அன்றாட வாழ்வின் நிகழ்வை, பெருமளவு பாதிக்கும் மலச்சிக்கலை, முறையாக கவனித்து சரிசெய்து கொள்ளாவிட்டால், அது, உடல் அளவிலும், மன அளவிலும் மிகப் பெரிய இன்னல்களை, உருவாக்கி விடும்.
இந்த நிலையை தவிர்க்க, தும்பை இலைகளுடன் கொத்தமல்லி அல்லது கறிவேப்பிலை சேர்த்து துவையல் போல செய்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல்கள் விலகி, உடல் இலகுவாகி, மனம் உற்சாகமடையும்.

கண்பார்வை :
கணினிகளில் நாள் முழுதும் அமர்ந்து பணியாற்றுவோர் அனைவரும் கண் வலி மற்றும் கண் பூத்துப்போவது எனும் பார்வைக் குறைபாட்டால் துன்பப்படுவர். அவர்களின் துயரம் போக்க, தும்பை இலைகள் மற்றும் மலர்களை அரைத்து பாலில் கலந்து சூடாக்கி பருகி வர, கண் பார்வைக் குறைபாடுகள் யாவும் நீங்கி விடும்.

மருத்துவ பலன்கள் தரும் தும்பை மலர்கள்
தலையில் நீர் கோர்த்து தலை பாரம், மூக்கடைப்பு மற்றும் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி பாதிப்புகளிலிருந்து மீள, தும்பைப் பூவை பாலில் கலந்து அரைத்து, நல்லெண்ணையில் காய்ச்சி, அந்த எண்ணையை, தலையில் நன்கு தேய்த்து, குளித்து வர, மேற்சொன்ன பாதிப்புகள் யாவும் நீங்கி, உடல் குணமடையும்.

உடல் சூட்டை தணிக்க, அவசியம் எண்ணைக் குளியல் எடுக்க வேண்டும், வாரமொரு முறையாவது எடுக்க வேண்டிய எண்ணைக் குளியலை நாம் முற்றிலும் புறக்கணித்ததன் விளைவாக, இன்று பல விதமான உடற் பிணிகளில் அல்லலுருகிறோம்.

நல்லெண்ணையில் தும்பை மலர்களை இட்டு காய்ச்சி, உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்த எண்ணையை நன்கு தேய்த்து, சற்றுநேரம் உடலில் ஊறிய பின்னர், குளித்து வர, கண்களின் பார்வைத் திறன் நன்கு தெளிவடையும். ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் விலகி, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

தும்பைப் பூச்சாறெடுத்து, அதில் சில துளிகள் சம அளவு தேனுடன் கலந்து தினமும் பருகி வர, உடலின் நற்சத்துக்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத தாகம், நா வறட்சி மற்றும் உடல் அசதி யாவும் சரியாகி, உடல் நலம் பெறும்.


சிலருக்கு காதுகளில் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக, சீழ் வடிவதை தடுக்க, தும்பை மலர்களை பெருங்காயத் தூளுடன் சேர்த்து, எண்ணையில் காய்ச்சி, அதை காதுகளில் சில சொட்டுகள் தினமும் இட்டு வர, காது சீழ் வடிதல் பாதிப்புகள் யாவும் விரைவில் மறையும்.
இதுபோன்ற, எண்ணற்ற நற்பலன்களை, மனிதர்களுக்கு தரும் தும்பைச்செடிகளை, நகரங்களில் வசித்தாலும், வீடுகளில் தொட்டிகளில் இட்டு வளர்த்துவர, அவசர தேவைகளுக்கு, என்றும் துணையிருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அசத்தல் டிப்ஸ் - Tips for Wellness

1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்
4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.====================================================


எதுக்கு எது நிவாரணம்?
மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.
காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.
வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!
1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!! - Health Tips

1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS