மைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை; அதற்கான காரணமும் தெரியாது. ஆனால், ஒற்றைத்தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்து விட்டால் போதும், மாத்திரையும் கையுமாக தான் அலைய வேண்டும். மூளை நரம்பு திசுக்களில் ஏற்படும் அதிர்வுகள் தான் “மைக்ரேன்’ தலைவலி. தலையை பிளப்பது போல வலி இருக்கும். ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும். சில மணி நேரம் , சில நாள் வரை கூட தொடரும்.
எத்தனை வகை?
பல நாடுகளிலும் “மைக்ரேன்’ பாதிப்பு உள்ளது. 80 சதவீத மைக்ரேன் பாதிப்பு சாதாரணமானவை தான். 20 சதவீத மைக்ரேன் பாதிப்பு தான் , சில நோய்களால் ஏற்படுகின்றன. இந்த வீரியமுள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம். அசாதரணமான ஒளி, அலர்ஜியான சத்தம், சாக்லெட் ,ஐஸ்கிரீம் போன்ற சில வகை உணவுகள் ஆகியவை தான் மைக்ரேன் வர காரணம். இதை சாப்பிடுவோர் எல்லாருக்கும் தலைவலி வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு தான் வரும்.
அறிகுறி என்ன?
பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும். எந்த வேலையையும் செய்ய முடியாமல் முடக்கிப்போடும். கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும். வாந்தி வருவது போல தோன்றும்.
மன அழுத்தம் இருந்தால், இந்த தலைவலி வரும். அடிக்கடி வந்தால் மைக்ரேன் தான். அதுபோல, சிகரெட் பிடிப்போர், அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந்த பாதிப்பு வரும்.
நீடித்தால் உஷார்:
தனக்கு வந்திருப்பது மைக்ரேன் தானா என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாது. சில அறிகுறிகள் , தொடர்ந்து வருவது போன்றவற்றால் தான் அதை கண்டுபிடிக்க முடியும். மேற்சொன்ன காரணங்களுடன், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் மைக்ரேன் வரும். தனக்கு எதனால் வருகிறது என்பதை தெரிந்து அதை தவிர்த்துக்கொண்டாலே போதும்; ஒற்றைத்தலைவலி வராமல் நின்று விடும்.
எந்தெந்த உணவு:
டின்னில் அடைக்கப்பட்ட , நாள் பட்ட பதப்படுத்தப்பட்ட மாமிசம், ரெட் ஒயின் உட்பட சில வகை மதுக்கள், பீன்ஸ், காபி, சாக்லெட், மோர், கிரீம், மிட்டாய்கள், உணவில் மணம் அதிகரிக்க சேர்க்கப்படும் சில வகை பொருட்கள், வேர்க்கடலை உட்பட சில வகை கடலைகள், பப்பாளி, ஊறுகாய், சாஸ், இனிப்பு வகைகள் போன்றவையும் மைக்ரேன் தலைவலியை தூண்டும். இந்த உணவுகளில் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவருக்கு மைக்ரேன் வரும். அதனால், இதை கண்டுபிடித்து அந்த உணவை தவிர்க்க வேண்டும்.
மரபு காரணமா?
பரம்பரையாக வரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. அப்பா, அம்மாவில் யாருக்காவது இருந்தாலோ, தாத்தா, பாட்டிக்கு இருந்தாலோ வாரிசுகளில் யாருக்காவது வரும். குழந்தைகளுக்கு வருமா என்று கேட்கலாம்; நிச்சயமாக வரும். ஆனால், சில நிமிடங்களில் போய்விடும். அதனால் தான், சில குழந்தைகளுக்கு வாந்தி வருகிறது; லைட்டை பார்த்தாலே கண் கூசுகிறது. இளைய வயதில் மைக்ரேன் வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சிகிச்சை பெற வேண்டும்.
மோசமானது எது?
மைக்ரேனில் மோசமான தலைவலி நான்கு கட்டமாக வரும். மலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலைவலி வந்தால் சந்தேகப்பட வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் மைக்ரேன் ஆரம்பம். இதன் பெயர் “ப்ரோட்ரோம்’ இரண்டாவது கட்டம் “ஆரா’ என்பது. இந்த கட்டத்தில் தான் விளக்கு வெளிச்சத்தை பார்த்தாலே கண்களை மூடிக்கொள்ள வைக்கும். சில வகை வாசனைகள் கூட தலைவலியை ஏற்படுத்தும். பேசும் போது வார்த்தைகள் தடுமாறும்; நினைவாற்றலும் பாதிக்கும்.
மூன்றாவது கட்டம்:
இதில் தலைவலியுடன் மூக்கடைப்பு, தண்ணீர் வற்றிப்போன நிலை, மயக்கம் வரும். நான்காவது கட்டம், போஸ்ட்ரோம்; நாட்கணக்கில் கூட இது தொடரும். கடைசியில் மன அழுத்தம் ஏற்படும். எந்த வேலையிலும் நாட்டம் வராது.
சிகிச்சை தேவையா?
பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளுக்கு சிகிச்சை தேவையில்லை. உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்தாலே போதும். தொடர்ந்து வந்தால், அதை தடுக்க யோகா பயிற்சி செய்வது நல்லது.
மாத்திரைகளை விழுங்குவதை தவிர்க்க வேண்டும். மிக அதிக பாதிப்பு வந்தால், அதை தடுக்க இதயத்துக்கு “பேஸ் மேக்கர்’ கருவி பொருத்துவது போல, காதுக்கு பின்பக்கம் கருவியை வைத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி, நரம்பு திசுக்களை சரி செய்ய முடியும். இந்த கருவி பொருத்த செலவு என்ன தெரியுமா? இரண்டரை லட்சம் ரூபாய்.
2 comments:
What a fantastic blog I have ever seen. I didn’t find this kind of information till now. Thank you so much for sharing this information. For more information visit legal empire for sale
We are urgently in need of kidney donors in Kokilaben Hospital India for the sum of $500,000,00,( 3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
WhatsApp +91 7795833215
Post a Comment